×

ராயனுர் பகுதியில் சாக்கடை வடிகால் உடைந்து சாலையில் செல்லும் கழிவுநீர்

கரூர், மே. 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனுார் பொன் நகர் அருகே சாக்கடை வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் செல்வதை தடுத்து நிறுத்திட வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனுார் பொன்நகரை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இந்த பொன்நகரின் அருகே சாக்கடை வடிகாலில் அதிகளவு கழிவு நீர்தேக்கம் காரணமாக கழிவு நீர் வெளியே சென்று சாலையில் கலந்து செல்கிறது. இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பகுதியின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கழிவு நீர் சாலையோரம் செல்வதால் கடும் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் வீசுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு கழிவு நீர் சாலையோரம் செல்வதை தடுத்து நிறுத்தி சுகாதாரத்தை மேம்படுத்திட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags : Rayanur ,Karur ,Rayanur Bon Nagar ,Karur Municipality ,Ryanur Ponnagar ,
× RELATED கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் கலை, கைவினைப் பொருட்கள் பயிற்சி