×

பொதுபார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

ஈரோடு, மே 5: ஈரோட்டில் வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரியில் தேர்தல் பொது பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அரசினர் பொறியியல் கல்லூரியில் நடந்தது. ஒவ்வொரு தொகுதிகளிலும் சுற்றுக்கள் வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த பணிகளை தேர்தல் பொதுபார்வையாளர்களான மினிஸ்தி, பார்தி தீக்‌ஷித், ஷானவாஸ், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை முறையாக எண்ணுகிறார்களா? எனவும், வேட்பாளர்கள், முகவர்கள் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

Tags : Erode ,Government Engineering College ,Erode East ,Erode West ,Modakkurichi ,Perundurai ,Bhavani ,Anthiyur ,
× RELATED திம்பம் வனப்பகுதியில் கனமழை மலைப்பாதையில் அருவியாக கொட்டிய நீர்