ஈரோடு, மே 5: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளை தமிழக வெற்றிக்கழகம் 5 தொகுதியும், அதிமுக 3 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர் ஆகிய தொகுதிகளை திமுக வெற்றி பெற்றிருந்தது. பவானி, கோபி, பெருந்துறை, பவானிசாகர (தனி) ஆகிய 4 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வேட்பாளர்களான விஜய் பாலாஜி- ஈரோடு கிழக்கு தொகுதியையும், ஆனந்த் மோகன்-ஈரோடு மேற்கு, சண்முகன்-மொடக்குறிச்சி, செங்கோட்டையன்-, தமிழ்செல்வி-பவானிசாகர் (தனி) ஆகியோர் 5 தொகுதிகளையும் கைப்பற்றினர்.
இதேபோல், அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பெருந்துறை, பவானி ஆகிய தொகுதிகளை 2வது முறையாக கைப்பற்றியது. கூடுதலாக அந்தியூர் தொகுதியையும் என அதிமுக 3 தொகுதிகளை கைப்பற்றியது. பவானிசாகர் தொகுதியை தவெகவிடம், அதிமுக இழந்தது. மாவட்டத்தில் 8 தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
