×

திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

தூத்துக்குடி, மே 5: திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜ சார்பில் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், தவெக சார்பில் ஜே.கே.ஆர்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒபிலியா உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக, பாஜ, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பிற்கு இடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 72,723 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்து தவெக வேட்பாளர் முருகன் 66,851 வாக்குகள் பெற்று 2வது இடம் பெற்றார். வாக்கு வித்தியாசம் 5,872 ஆகும். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 34,159 வாக்குகளும், நாம் தமிழர் ஒபிலியா 9,794 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 722 வாக்குகள் கிடைத்துள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் இதுவரை நடந்த 7 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Anita Radhakrishnan ,Tricendoor ,Thoothukudi ,Anita Radakrishnan ,Trinchendoor ,Minister ,K. R. M. RADAKRISHNAN ,TAVEKA SARBIL J. K. R. Murugan ,
× RELATED பள்ளிபாளையம் நகராட்சி ஆபீஸ் முன் ஒரு...