தூத்துக்குடி, மே 5: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் தவெக வேட்பாளர் நாத், 1 லட்சத்து 536 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் 62 ஆயிரத்து 805 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தவெக வேட்பாளர் 37 ஆயிரத்து 731 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கு பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். ஆனால் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் 26 ஆயிரத்து 213 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் உள்பட 13 பேர் தங்களது டெபாசிட் தொகையை இழந்து உள்ளனர்.
