×

மேற்குவங்கத்தில் வெற்றி முகம்.. மம்தாவின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டிய பாஜக.!!

கொல்கத்தா: சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பல அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த மேற்குவங்க மாநிலத்தில் பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

2026 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸை (TMC) பின்னுக்குத் தள்ளி, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாதையில் முன்னிலை வகித்து வருகின்றது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக கிட்டத்தட்ட 167 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக திரிணாமுல் காங்கிரஸ் 82 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிகும் நிலையில், இது மம்தா பானர்ஜியின் நீண்டகால ஆளுமையை அசைத்துள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 100-க்கும் குறைவான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் பாஜக முன்னிலை நிலவரம் அப்படியே தொடர்ந்து வருவதால் மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக பெற உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை இடதுசாரி முன்னணியும், அதன் பிறகு தற்போது வரை திரிணாமுல் காங்கிரஸூம் (TMC) ஆட்சி செய்து வருகின்றன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பாஜக 77 இடங்களைப் பிடித்து மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆட்சியமைக்கும் அளவிற்கான ஆதரவை பாஜக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாஜகவின் தேசிய தலைமை, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே அதிகாரப்பூர்வமாக முதலமைச்சரைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : West ,BJP ,Mamta ,Kolkata ,Western ,
× RELATED தமிழக தேர்தல் 2026 – தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தவெக…