அரியலூர், மே 4: அக்னி நட்சத்திரம் இன்று (4ம்தேதி) தொடங்கிறது. அதிக வெயிலால் சாலையில் கானல் நீர் காணப்பட்டது. நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (4ம்தேதி) அக்னி நட்சத்திரம் தொடங்குவதால், வெயில் கொடுமை அதிகமாக இருக்கம். பொதுமக்கள் வெளியே சொல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
பகலில் தான் வெயிலின் தாக்கம் என்றால் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். சாலையில் சென்ற பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் முகம் மற்றும் தலையை துணியால் மூடியபடி சாலைகளில் நடந்து சென்று வருகின்றனர். பலர் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்தனர். கடும் வெயிலால் கல்லூரி மாணவிகள் முகத்தை துணியால் மூடியபடி சென்றனர்.
