பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் 2 இடங்களில் காவல்துறை கொடி அணிவகுப்பு

 

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க சென்னை காவல்துறை சார்பில் 2 இடங்களில் கொடி அணி வகுப்பு பேரணி நடத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 23ம் ேததி நடந்தது. பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை இணைந்து வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து சீல் வைத்து பூட்டி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள 62 மையங்களில் நடக்கிறது. சில முக்கிய தொகுதிகளில் இடங்களில் பிரச்னைகள் நடக்கலாம் என்று உளவுத்துறை காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் தலைமையில் நேற்று மாலை சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வாக்கு எண்ணும் நாளான இன்று எந்த வித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக இருக்கும் வகையில் வடசென்னையில் எண்ணூர் விரைவு சாலையில் இருந்து என்ஆர்டி பாலம், போர் நினைவு சின்னம் சந்திப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, முரசொலிமாறன் பாலம், கொளத்தூர் அகரம் சந்தப்பு, கங்கா தியேட்டர், ஐசிஎப் சந்திப்பு, அண்ணா ஆர்ச் வழியாக கோயம்பேடு பகுதியில் உள்ள தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போலீசாரின் கொடி அணிவகுப்பு முடிவடைந்தது.

அதேபோல், தென் சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழம் உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பு, சைதாப்பேட்டை லிட்டில் மவுண்ட், எல்டாம்ஸ் சாலை, அண்ணா மேம்பாலம், ஸ்பென்சர் பிளாசா வரியாக கொடி அணிவகுப்புமீண்டும் ராஜரத்தினம் மைதானத்தில் முடிவடைந்தது. வாக்கு எண்ணும் நாளான இன்று பொதுமக்கள் அச்சமின்றி இருக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் உயர் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: