சென்னை: மமக தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: மே ஒன்றாம் தேதி முதல் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தை மே தின உழைப்பாளர் தின பரிசாக ஒன்றிய அரசு மக்கள் மீது திணித்து இருக்கிறது.. மேற்காசியப் போரின் தாக்கத்தால் விலை ஏற்றம் என்று காரணம் சொல்வதை ஏற்க இயலாது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைவாக இருந்தபோது அதிக விலைக்கு விற்று எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வந்தது. எனவே தற்போதைய சூழலில் அவை தங்களது லாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டுமே தவிர விலையை அதிகப்படுத்திக் கொண்டே செல்வது சரியான ஒன்று அல்ல. தொடர்ச்சியாக மக்கள் நலனை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது. உடனடியாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திரும்ப பெற வேண்டும்.
