×

பஞ்சாப் அரசு கட்டிடத்தில் காலிஸ்தானி கொடியை ஏற்றிய 2 பேருக்கு 5 ஆண்டு சிறை: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் காலிஸ்தானி கொடியை ஏற்றிய 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு ஒருநாள் முன்பு (ஆக.14)பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில், காலிஸ்தானி கொடி ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) மோகா மாவட்டத்தை சேர்ந்த இந்தர்ஜீத் சிங், ஜஸ்பால் சிங் ஆகியோரை குற்றவாளிகள் என அடையாளம் கண்டுபிடித்தது. மேலும், இருவருக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளான பன்னுன் மற்றும் அவரது கூட்டாளியான ஹர்பிரீத் சிங் ஆகியோருடன் தொடர்புள்ளதாக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில் மொஹாலியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இந்தர்ஜீத் சிங், ஜஸ்பால் சிங் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.16,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

Tags : Khalistani ,Punjab ,NIA ,New Delhi ,Independence Day ,
× RELATED மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணி...