மேற்கு வங்கத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாக்ரஹாட் பாச்சிம்-11 வாக்குச்சாவடிகள், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட புகார்களை அடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
