- திமுக
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை அண்ணா
- அரிவாளயம்
- சென்னை
- சென்னை அண்ணா அறிவாலயம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று திமுக வேட்பாளர்கள் சந்தித்தனர். அப்போது வெற்றிவாய்ப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக வேட்பாளர்கள் பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, கே.ஆர்.பெரியகருப்பன், சு.முத்துசாமி, சி.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், செந்தில்பாலாஜி, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், டி.ஜெ.கோவிந்தராஜன், சபா.ராஜேந்திரன், நாமக்கல் ராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ்.மூர்த்தி, ரெ.மகேஷ், ஆ.தமிழரசி, எஸ்.ஏ.சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர்.சிவா ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எந்தவித குளறுபடியும் நடந்து விடக் கூடாது. நம்முடைய பார்வையில் இருந்து எந்த ஒரு விஷயமும் தவறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
