- வெட்டுவனம் ஹரேயம்மன் கோயில்
- பள்ளிகொண்டா
- வேலூர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரா, கர்நாடகா, கேரளா…
பள்ளிகொண்டா, மே1: வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் உண்டியலில் ரூ.12.80 லட்சம், 36 கிராம் தங்கம், 275 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர். இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் கடந்த 3 மாதமாக செலுத்திய காணிக்கைகள் கணக்கிடும் பணி நேற்று நடந்தது. திருப்பத்தூர் உதவி ஆணையர் கோகுல், வேலூர் சரக ஆய்வர் செண்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்து 746 ரொக்கம், 36 கிராம் தங்க நகை, 275 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளது. காணிக்கை எண்ணும் பணியில் செயல் அலுவலர் சண்முகம், கணக்காளர் சரவணபாபு, மற்றும் கோயில் ஊழியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
