மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

திருத்தணி,மே 1: திருத்தணி அருகே தெக்களூரில் வீட்டில் பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று தெக்களூர் கிராமத்தில் சோதனையிட்டனர். அப்போது, கஜேந்திரன்(54) என்பவர் அவரது வீட்டில் 31 டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.

Related Stories: