×

5 மாநில தேர்தல் காரணமாக அரசு பள்ளியில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவிகள்

திருப்பூர், ஏப் 30: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரி தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக, கல்லூரி அலுவலகம் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

அதேபோல் மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு ராயபுரத்தில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி நிர்வாகமும் உயர்கல்வித்துறையும் மேற்கொண்டுள்ளனர். இந்த செமஸ்டர் தேர்வு முழுவதும் ஜெய்வாபாய் பள்ளியிலேயே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tiruppur ,Tamil Nadu Assembly general elections ,LRG Government Women's College ,Palladam Road ,Tiruppur district ,Election Commission ,
× RELATED பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்