சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை மாட்டக்கூடாது

பாடாலூர், ஏப். 30: சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பதாகைகள் வைப்பதை தடை செய்ய கோரிக்க விடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் பல வகையான மரங்கள் உள்ளன. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மரங்களும் உள்ளன. பல இடங்களில் பனை மரங்களும் இருந்து வருகின்றன. பழமையான உயிருள்ள மரங்களில் பலர் விளம்பர பலகையை ஆணி அடித்து வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர்.

எந்த அனுமதியும் இல்லாமல் உயிருள்ள மரங்களின் மீது ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை வைத்து வருகின்றனர். பனை மரங்களில் அதிக அளவில் விளம்பர பதாகைகளை வைத்து மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை பொருத்தி விளம்பரம் செய்து வருகின்றனர். மரங்களில் பல ஆணிகள் அடிக்கப்பட்டு விளம்பர பலகைகள் வைப்பதால் மரங்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

உயிருள்ள மரத்தில் ஆணி அடித்த இடத்தில் மரத்தின் உட்பகுதியில் மரத்தின் உயிரோட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி முழுமையும் குன்ற ஆரம்பிக்கிறது. தொடர்ந்து மரம் பட்டு போய் கீழே சாயும் நிலை ஏற்படுகிறது. எனவே உயிருள்ள மரங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: