பெரம்பலூர்,ஏப்.29: பெரம்பலூர் மாவட்டத்தில் மே தினத்தினை முன்னிட்டு வருகிற 1ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மே தினத்தினை முன்னிட்டு வருகிற 1ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் உலர்தினமாக (Dry Day) விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
