தர்மபுரி, ஏப். 30: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் கொட்டதண்டுக்காரன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மனைவி அனிதா (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். செல்வக்குமார் கர்நாடகாவில் உள்ள கல்குவாரி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த அனிதா, கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால், பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
