டெல்லி: 5 மாநிலத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்க உள்ளது. ஏப்.29க்குப் பிறகு பாருங்கள்… பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயர்ந்துவிடும்’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “தேர்தல் கால நிம்மதி முடிந்தது, விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ கிளம்பிவிட்டது!
ஏப்ரல் 29-ஆம் தேதிக்குப் பிறகு கவனித்துப் பாருங்கள் – பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயரும்.
எண்ணெய் விலை மலிவாக இருந்தபோது, மோடி அரசு அந்த லாபத்தைத் தன் பையிலேயே வைத்துக் கொண்டது. இப்போது விலை உயர்ந்திருக்கும் நிலையில், அந்தப் பாரத்தை உங்கள் மீது சுமத்தப்போகிறது.
மலிவான காலத்தில் மக்களைச் சுரண்டிவிட்டு – விலைவாசி உயர்வு வரும்போது மக்களைத் தவிக்கவிடும் அரசு இது” என தெரிவித்துள்ளார்.
