- நாமகிரிப்பேட்டை
- நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம்
- நாமக்கல் மாவட்டம்
- முள்ளுக்குறிச்சி
- மெட்டாலா
- மங்களபுரம்
- Pudupatti
- Seerapalli
நாமகிரிப்பேட்டை, ஏப்.29: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் 1092 மூட்டையும், உருண்டை மஞ்சள் 316 மூட்டையும், பனங்காளி 54 முட்டைகள் என மொத்தம் 1462 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விரலி மஞ்சள் அதிகபட்சம் குவிண்டால் ரூ.16,669க்கும், குறைந்தபட்சம் ரூ.12,899க்கும், உருண்டை மஞ்சள் அதிகபட்சம் ரூ.13,669க்கும், குறைந்தபட்சம் ரூ.11,239க்கும், பனங்காலி மஞ்சள் அதிகபட்சம் ரூ.36,142க்கும், குறைந்தபட்சம் ரூ.8,999க்கும் விற்பனையானது. மொத்தமாக 1,462 மூட்டை மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு விற்பனையானது.
