டெல்லி : மூளைச்சாவு அடைந்தவரின் கைகள் தானமாக கொடுக்கப்பட்டதால் விபத்தில் இரு கைகளையும் இழந்த பெண்ணுக்கு புதிய கைகள் பொருத்தப்பட்டன. 12 மணிநேரம் போராடி, இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்தனர்.அறுவை சிகிச்சைக்கு பின்பு அவர் நலமுடன் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், கைகளை தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
