தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு: விமான பயணிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் . தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக சொந்த ஊர் சென்றவர்கள் விமானங்களில் சென்னை திரும்பி வருகின்றனர். விமானங்களில் பயணம் செய்வோருக்கு விமானகட்டணம் பல மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இருந்தாலும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பயண கட்டணங்களை விமான நிறுவனங்கள் நேற்றிரவு முதல் உயர்த்தியுள்ளது.

இதன்படி உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள்; தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ரூ.5354 ஆக இருந்த விமான கட்டணம் நேற்றிரவு முதல் ரூ.17,089 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.5099 ஆக இருந்த விமான கட்டணம் நேற்றிரவு முதல் ரூ.32,508 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.4,551 ஆக இருந்த விமான கட்டணம் நேற்றிரவு முதல் ரூ.14,310 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4,634ஆக இருந்த விமான கட்டணம் நேற்றிரவு முதல் ரூ.11,149ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: