திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாதலமான சாத்தனூர் அணையில் திரண்ட பொதுமக்கள்

*பூங்காக்கள், முதலை பண்ணையை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்

தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் நேற்று திரண்டனர். அப்போது பூங்காக்கள், முதலை பண்ணையை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் வைத்து பல்வேறு திரைப்படங்கள் இந்த சாத்தனூர் அணையில் எடுக்கப்பட்டது.

அணை முழுஅளவு நீர் எட்டியதனால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் விவசாய பாசனத்திற்காக தென்பெண்ணை ஆறு வலது புறம், இடதுபுறம், திருக்கோவிலூர் பழைய ஆயகட்டு பகுதிகளுக்கு வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் நீர் மின்சாரம் தயாரிக்க கூடிய வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் நீர் மின்சாரம் 7 எம்எம் மின்சாரம் எடுக்கப்பட்டு சுற்றி உள்ள பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதனால் சாத்தனூர் அணை 86.35அடியாக நீர் மட்டும் குறைந்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதனால் நேற்று விடுமுறை தினம் என்பதாலும் சாத்தனூர் அணையில் உள்ள சிறுவர் பூங்கா, டைனோசர் பார்க், அறிவியல் பார்க், படகுகுளம், நீச்சல் குளம், வீரமங்கை பார்க், அறிவியல் பார், முயல் கூண்டு பறவைகள் கூண்டு 11 கண் மதகுப்பகுதி முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்து சென்றனர்.

சாத்தனூர் அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன் பொதுமக்களுக்கு முதல் ரகம் ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி சுற்றுலா பயணங்கள் அங்கே சமைத்து சாப்பிட்டு பொழுதை கழித்து சென்றனர். மேலும் கடும் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் விவசாய பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரில் இளைஞர்கள், பெண்கள் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: