நெல்லை – சென்னை இடையே முன்பதிவு இல்லாத மெமு விரைவு ரயில்

சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை – நெல்லை இடையே முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நெல்லையில் இருந்து தாம்பரம் வரை முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று (26ம் தேதி) மதியம் 1.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: