காங்கிரஸ் எஸ்சி துறையின் கூடுதல் தேசிய ஒருங்கிணைப்பாளராக எம்.பி.ரஞ்சன் குமார் நியமனம்

சென்னை: காங்கிரஸ் எஸ்சி துறையின் கூடுதல் தேசிய ஒருங்கிணைப்பாளராக தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறையின் கூடுதல் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக 8 பேரை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். அதன்படி நானக்சந்த், சுரேஷ் கெய்க்வாட், மணிராம் கெய்லாவல், சித்தார்த் ஹட்டியாம்பிரே, ஆர். தர்மசேனா, எம்.பி.ரஞ்சன் குமார், கரண் பகத், நரேந்திர பால் நிஷாந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் எஸ்சி துறை கூடுதல் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட எம்.பி.ரஞ்சன்குமார் தமிழகத்தை சார்ந்தவர். இவர் தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவராக உள்ளார். தற்போது அவருக்கு கூடுதலாக தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: