5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 மரண தண்டனையுடன் 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

சிவகங்கை: வீடியோ கேம் கற்றுத் தருவதாக சிங்கம்புணரியில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சந்திரன் என்பவருக்கு 5 மரண தண்டனையுடன் 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தை சார்ந்த 5 சிறுமிகளை அழைத்து சென்று சந்திரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 04ம் தேதி திருப்பத்தூர் மகளை காவல் நிலையத்தில் சந்திரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வழக்கின் அடிப்படையில் சிங்கம்புணரியை சேர்ந்த சந்திரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இதுதொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சந்திரனுக்கு 5 மரண தண்டனையுடன் 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.

Related Stories: