பிரதமருக்கான மேடையில் ஏறிய நபர் மோடி பாதுகாப்பு குறைபாடு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பிரதமருக்காக அமைக்கப்பட்ட மேடையில் ஒரு நபர் ஏறிய விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள எச்பிசிஎல் நிறுவனத்தின் பச்சபத்ரா சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார். கடந்த 21ம் தேதி இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென்று சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து பிரதமரின் வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவத்துக்கு முந்தைய தினம் (ஏப்.20) பிரதமருக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் அர்ஷாத் என்ற நபர் ஏறி, அங்கு வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமருக்கான மேடையில் ஒரு நபர் ஏறிய விவகாரம் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து இந்த கடுமையான பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் பச்சாபத்ரா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அச்சலா ராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: