×

பாதுகாப்பு நடவடிக்கையாக 100 மீட்டருக்குள் இருக்கும் கடைகளை அடைக்க அறிவுறுத்தல்

மஞ்சூர், ஏப். 23: தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக 100 மீட்டருக்குள் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்நிலையில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் தொலை தூரம் மற்றும் எல்லையோர வாக்குச்சாவடிகளாக உள்ள கிண்ணக்கொரை, கோரகுந்தா மற்றும் கெத்தை வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் தொலை தூரம் மற்றும் எல்லையோர வாக்குச்சாவடிகள் என்பதால் இந்த வாக்குச்சாவடிகளின் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் என கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பஜாரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் கடைகளை அடைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags : Manjoor ,Tamil Nadu Assembly elections ,Ooty Assembly ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு