×

டாஸ்மாக் கடைகளில் ரூ.15 கோடிக்கு மது விற்பனை

சேலம், ஏப்.23: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சட்டம், ஒழுங்கை காக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு கடந்த 21ம் தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 20ம் தேதி டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டியது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் அன்றிரவு 7 மணி முதல் 10 மணி வரை விற்பனை இருமடங்காக இருந்தது. மதுபிரியர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துகொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனர். தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக பைகளில் வாங்கிச்சென்றனர். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வழக்கமான நாட்களில் தினமும் ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடக்கும். தேர்தலையொட்டி 3 நாட்கள் விடுமுறை என்பதால் 20ம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.15கோடிக்கு மது விற்பனை நடந்தது. வழக்கமாக நடக்கும் விற்பனையை காட்டிலும் அன்று மது விற்பனை இருமடங்கு அதிகம் நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tasmac ,Salem ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu ,
× RELATED வாழப்பாடியில் வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்