இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளியை பாகிஸ்தனான் மூடியது. பதிலடியாக இந்தியாவும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளியை மூடியது. 2025ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடியே வைத்துள்ளது. வருகிற 24ம் தேதி தடை காலாவதியாக இருந்த நிலையில், இந்த தடையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடித்து பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
