குப்பை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு பள்ளக்கொரவள்ளிமேடு கிராமத்தில் கொம்யூன் ஆணையர் ஆய்வு

பாகூர் : புதுச்சேரி, கன்னியக்கோயில் அடுத்த உச்சிமேடு வருவாய் கிராமம் பள்ளக்கொரவள்ளி மேடு கிராமத்தில் தனி நபர் ஒருவர் அங்கு இருக்கும் விவசாய நிலத்தை சமன்படுத்தி விற்பனை செய்வதற்காக பணி செய்து வருகிறார்.

அதில் குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாய பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டது வருகிறது.

அதே போன்று அருகில் இருக்கும் ஓடை, வாய்க்கால, குட்டைகளில் செப்டிக்டேங்க் கழிவுகள் கலந்து நீர் மாசடைந்து வருகிறது. ஓடையில் நீர்வழி பாதை அடைக்கப்பட்டுள்ளதால் உபரி நீர் செல்லும் பாதையும் தடைபட்டுள்ளது.

மருத்துவ கழிவுகளும் கொட்டுவதால் அருகிலிருக்கும் குடியிருப்புகளில் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமீப காலமாக குழந்தைகள், முதியோர், பெண்களுக்கு சுவாசம் சம்மந்தமான நோய்கள் அதிகரித்து வருகிறது.

எனவே கழிவுகளை கொட்டும் வாகனங்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றி இடத்தை சுத்தப்படுத்தி தரவேண்டும். வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரப்பையும் கழிவுகளையும் அகற்ற வேண்டும்.

பொது சுகாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பில், மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு குழுமம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, வேளாண்துறை, பொதுப்பணித்துறை, பாகூர் காவல் நிலையம் ஆகியோருக்கு மனு கொடுத்திருந்தனர்.

இதையடுத்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: