நாம் இந்த உலகத்தின் மலர்கள் ஆனா தாமரை மட்டும் தமிழ்நாட்டில் மலராது: கமல் திட்ட வட்டம்

 

ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதாித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் எம்பி நேற்று இரவு திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழ்நாடு வெல்ல வேண்டும் என ஒன்று கூடி நின்றுள்ளனர். சின்னம் மட்டும் பார்த்தால் நல்லது நடக்காது. சிந்தாந்தம் என்றுமே ஒன்றுதான். நாட்டை ஆட்சி செய்வது என்றால் மக்களுக்கு பாரபட்சமின்றி, மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். உங்களுக்கு நல்லது செய்யும் அரசை நீங்கள் நிறுவ வேண்டும். உங்கள் மத தளங்களை காக்க வேண்டியது கடமை.

வீட்டை வளர்க்கும் திறமை, குடும்பத்தை உயர்த்தும் திறமை, பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் திறமை பெண்களுக்கு உண்டு. 543 தொகுதிக்குள்ளே 33 சதவீதம் கொடுக்க வேண்டும். இருக்கும் இடத்திலேயே அதை கொண்டு வர நான் போராடுவேன். தலைவன் இருக்கிறான் என்ற என் பாட்டுக்கு அர்த்தம் நாம் எல்லோரும் சிந்தித்தது தான்.

உங்களுக்காக நான் அதை வார்த்தை படுத்தினேன். திமுக மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் வளர்ந்த கட்சி. மகளிர், மாணவிகள், இளைஞர்கள் என அனைவரது கல்விக்கு இந்த அரசு செய்த நன்மைகள் குறித்து பாரபட்சமின்றி மக்கள் சிந்திக்க வேண்டும். திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வடக்கில் இருந்து வருகிறது. இங்குள்ளவர்கள் குரல் அது இல்லை. முதலாளிகள் சொல்வதை இங்குள்ளவர்கள் செய்கின்றனர்.

நாட்டு மக்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாட கூடாது. வடக்கில் நல்லாட்சி என்றால் அங்கிருந்து ஏன் மக்கள் புலம்பெயர்கின்றனர். மொழி, மதம், இனம் என எதையும் திணிக்க கூடாது. தமிழ்மொழி போன்று பல மொழிகள் மழுங்கி போனது. நாம் இந்த உலகத்தின் மலர்கள். ஒரு பூ (தாமரை) மட்டும் இங்கு மலராது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: