கோவைக்கான வளர்ச்சி திட்டங்கள் – செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு

கோயம்புத்தூர்: கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கோவைக்கான வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசினார். 1 லட்சம் கோடியில் கோவைக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிவிப்பை செந்தில்பாலாஜி வெளியிட்டார்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு 1 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்பை செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சி அமைத்தால் கோவையில் ரூ.50,000 கோடியில் தொழில்துறை விரிவாக்கத்துக்கும், ரூ.50,000 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும். 2006-ம் தேர்தலை முன்னிட்டு, 26 திட்டங்களை முன்மொழிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக மெட்ரோ ரயில், சென்னை, திருச்சியைப் வான்று புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். கோவையில் திறன் மேம்பாடுக்கு தனியாக பல்கலைக்கழகங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

நகர்ப்புற தொழில்துறை உள்கட்டமைப்பு, பெரியளவிலான தொழிற்துறை விரிவாக்கத்திற்கு தேவையான பயன்பாட்டிற்கு வழித்தடங்கள் மற்றும் சேவை உள்கட்டமைப்பு உருவாக்குவதற்கான பணிகளை முயற்சி செய்து முன்னெடுத்திருக்கிறோம்.

பசுமை தொழில் மாற்றம் அதற்கான பணிகள் கார்பன் அடர்த்தியை குறைப்பதற்காக சூரிய மற்றும் காற்று ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்புகளை பசுமை ஹைட்ரஜன் முயற்சியுடன் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். அடுத்து சுற்று சூழல் மேம்பாடு நொய்யல் ஆற்றை மீட்டெடுத்தல் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் குளங்கள், குட்டைகள் மற்றும் ஏறியமைப்புகள் புத்துயிர் அளித்தல், தொழிற்சாலை கழிவுநீரை மறுசுழற்சி செய்தல் இதற்கான திட்டங்களை இதில் சேர்த்திருக்கிறோம்.

மருத்துவ மதிப்பு மற்றும் சுகாதார மையம் மேம்பட்ட நோயாளிகள் தீவிர சிகிச்சை கட்டமைப்பு மருத்துவ ஆராய்ச்சி சூழமைவுகளை மற்றும் வான்வெளி ஆம்புலன்ஸ் அமைப்புகள் உள்ளிட்ட வசதிகளை உருவாக்குகிறோம் அதற்கான வசதிகளை முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறோம். தவிர ஆபரண சில்லறை மற்றும் வர்த்தக மையம் கோயம்புத்தூரை தேசிய ஆபரண மையமாக நிலைநிறுத்த தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுத்திருக்கிறோம். தொழிற்துறை சார்ந்த புதிய முயற்சிகளை முன்னெடுத்து கோவை மாவட்டம் தமிழ்நாட்டின் நான்காம் இடத்தில் இருக்கக்கூடிய உற்பத்தி என்பது அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளுக்குள் முதல் இடத்தை பெறுவதற்காக முயற்சிகளை இந்த திட்டங்களில் வடிவமைத்து இருக்கிறோம் என்றார்.

50 ஆயிரம் கோடிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல். மேலும், நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான முயற்சிகள் அதில் மெட்ரோ ரயில் திட்டத்தை இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அரசு பொறுப்பேற்றவுடன் விரைந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை சிறப்பாக மேற்கொள்ள இருக்கிறோம். நீர்ப்பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சிக்கான உள்கட்டமைப்பு, சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி ஆலைகளின் ஆதரவுடன் தொழில் துறைக்கான நீர் மற்றும் கழிவுநீர் குழாய் உருவாக்கும் பணிகளை முன்னெடுத்திருக்கிறோம். வெள்ள வேளாண்மை நகர்ப்புற வெள்ள அபாயங்களை கண்காணிப்பதற்கான பணிகளை முன்னெடுத்திருக்கிறோம் என்று விரிவாக பேசினார்.

Related Stories: