காஷ்மீர் உதம்பூரில் கோர விபத்து: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் உதம்பூரில் ராம்நகர் என்ற இடத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காகோர்ட் என்ற கிராமத்தில் வளைவில் திரும்பும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, ராம்நகர் பகுதியில் உள்ள காகோர்ட் கிராமத்திற்கு அருகே காலை 10 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.

ஒரு வளைவில் திரும்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து விழுந்து உருண்டது. அப்போது கேட்ட அலறல் சத்தத்தால் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிதறிய பேருந்தில் சிக்கியிருந்த காயமடைந்த பயணிகளை வெளியேற்றி, மீட்புப் பணிகளைத் தொடங்கினர். பின்னர், காவல்துறையினரும் பிற மீட்புக் குழுவினரும் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் மற்றும் சம்பவ இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், உதம்பூர் துணை ஆட்சியர் மிங்கா ஷெர்பாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: