பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி: கே.எல். ராகுல் அதிரடி ஆட்டம்!

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி நிர்ணயித்த 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய டெல்லி அணிக்குத் தொடக்கம் சாதகமாக அமையவில்லை. ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து, 18 ரன்களுக்குத் தடுமாறிய நிலையில், கே.எல். ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி இணைந்து அணியை மீட்டெடுத்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல், வெறும் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இது ஐபிஎல் தொடரில் அவரது 42-வது அரைசதமாகும், மேலும் ஆர்.சி.பி அணிக்கு எதிராக அவர் பதிவு செய்யும் 5-வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரின் அரைசதங்கள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றன. ஆட்டத்தின் இறுதி ஓவரில் டேவிட் மில்லர் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களை விளாசி டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

தனது பிறந்தநாளன்று கே.எல். ராகுல் விளையாடிய இந்த அதிரடி ஆட்டம், ஆர்.சி.பி அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்ததுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories: