×

தபால் வாக்கு பணி நாளை வரை நடைபெறும் என தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் 1.41 லட்சம் பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 85 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் தபால் வாக்களிக்க தகுதியானவர்கள்.

அவர்களில் தபால் வாக்களிக்க 1.91 லட்சம் விண்ணப்பித்த நிலையில் இதுவரை 1.41 லட்சம் பேருக்கு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை வரை தபால் வாக்குகள் பெறுகின்ற பணி தொடரும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து தபால் வாக்குகளை பெற்று வருகிறது. இதனிடையே, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் நேற்று தங்களின் தபால் வாக்குகளை செலுத்தினர். அவர்கள் தங்களின் தபால் வாக்கு செலுத்த பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Election Commission ,Tamil Nadu ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் பயண...