×

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வாஜ்பாய் எடுத்த முடிவை மோடி அரசு மாற்றுவது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வாஜ்பாய் எடுத்த முடிவை மோடி அரசு மாற்றுவது ஏன்..? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். மாநிலங்கள் இடையே உண்மையான சமநிலை ஏற்பட்ட பிறகே மறுவரையறை செய்ய வேண்டும் என்பது பிரதமராக இருந்த வாஜ்பாய் எடுத்த முடிவு. நிர்வாக திறனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் தொகையை பெருக்கியதை பாராட்டும் வகையில் அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது அநீதி. மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலத்துக்கு அதிக மக்கள் பிரதிநிதிகளை வழங்குவது தவறானது என முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Modi government ,Vajpayee ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED 540 எம்பிக்கள் பேசவே இப்போ நேரம்...