×

சீமானால் வெற்றி பெற முடியாது: அண்ணாமலையை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்: செல்வபெருந்தகை திட்டவட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தை மோடி தான் வழிநடத்துகிறார். காரைக்குடியில் சீமான் வெற்றி பெற முடியாது. அங்கு அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தான் வெற்றி பெறுவார். சீமான் ஆட்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார்கள்.

சீமான் ஆதரவாளர்கள் பலர் விஜய் கட்சியில் இணைந்து விட்டதாக தகவல்கள் வருகிறது. அதை சரி செய்வதில் சீமான் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரசை பற்றி சீமான் பேச வேண்டாம். அது தொடர்ந்தால் சங்கடம் ஏற்படும். அண்ணாமலை என்ன சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். அதேபோல் தான் அவர் இப்போது தொகுதி மறுவரையறை குறித்து பேசியதும் யாரும் நம்பவில்லை’’ என்றார்.

Tags : Seeman ,Tamil Nadu ,Annamalai ,Selvaperundhagai ,Congress ,Sivakasi, Virudhunagar district ,Election Commission ,Modi ,Karaikudi ,
× RELATED மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்