காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்தது. சிறைபிடித்த 12 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மீனவர்கள் மீது யாழ்ப்பாண நீரியல்வள திணைக்களத்தினரால்
இலங்கை நீர் பரப்பு எல்லைக்குள் அடக்கிய யாழ்ப்பாண வடக்கு காரைநகர் கடற்பரப்புக்குள் தலைமையதிபதியால் வழங்கப்படும்
வெளிநாட்டு மீன்பிடி வள்ளம் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் இல்லாது கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை ,மேற்கூறிய அனுமதி பத்திரம் இன்றி இலங்கை நீர்பரப்பு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி வலை, படகு நிற்கின்ற வரைக்கும் தொடக்கறுத்து வைக்காமை ,
காரைநகர் கடற்பரப்புக்குள் வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை ,போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீரியல் வளத்துறையினரால் வழக்குத்தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 20 படகுகளுடன் 141 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
