- திமுக
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- திருவாரூர்...
சென்னை: தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரச்சாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஐந்தாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13-ஆம் தேதி திருவள்ளூரில் தொடங்குகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஐந்தாம் கட்டமாக திருவள்ளூரில் பரப்புரையை தொடங்குகிறார்
13ம் தேதி திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூவிருந்தவல்லி, ஆவடி, ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு 14ம் தேதி வேலூர், காட்பாடி அணைகட்டு, கீழ்வைத்தியநாதன்குப்பம், குடியாத்தம், திருப்பத்தூர். ஆம்பூர், வாணியம்பாடி. ஜோலார்பேட்டை: 15ம் தேதி பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி அரூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, கெங்கவல்லி ஆத்தூர், ஏற்காடு ஓமலூர், மேட்டூர். எடப்பாடி சங்ககிரி வீரபாண்டி: 16ம் தேதி நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
கழகத் தலைவர் அவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாமென கேட்டுக் கண்டிப்புடன் கொள்ளப்படுகிறார்கள். கழக முன்னணியினர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தலைவர் அவர்கள் தங்கும் இடத்திற்கு வருவதை தவிர்த்து, பிரச்சாரக் கூட்டத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
