வேலூர்: சட்டமன்றத் தேர்தலையொட்டி 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி வேலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று தொடங்கியது. சத்துவாச்சாரி சிஎம்சி காலனியில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர் ஒருவரிடம் வாக்குப்பதிவு குழுவினர் நேரடியாக சென்று தபால் வாக்கை சேகரித்தனர்.
