புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தி வந்தன. இதில் ஈரானின் உச்ச தலைவர்உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. மேலும் உலகின் கடல்வழி வணிகத்துக்கு மிகவும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக அமெரிக்காவும், ஈரானும் 2 வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்பு கொண்டுள்ளன.
ஆனால் இந்த போரில் பாகிஸ்தானின் மத்தியதஸ்தம் குறித்து காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வருவதில் பாகிஸ்தானின் பங்கு என்பது பிரதமர் மோடியின் ராஜதந்திரம், வௌியுறவு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு.
இது இந்தியாவின் விஸ்வகுரு என்று சொல்லி கொள்ளும் மோடியின் வெற்று பிம்பத்தை அம்பலப்படுத்தி உள்ளது. காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகள், மேற்குகரையில் இஸ்ரேலின் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்புகள் பற்றி மோடி தொடர்ந்து மவுனம் காக்கிறார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் பாகிஸ்தானனை தனிமைப்படுத்தி, அது தோல்வியுற்ற நாடு என்பதை உலகுக்கு உணர்த்துவதே இந்தியாவின் கொள்கையாக இருந்தது.
இந்த விஷயத்தில், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மன்மோகன் சிங் சாதித்தது போல மோடி அரசு தௌிவாக வெற்றி பெறவில்லை. தற்போது பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பது மோடியின் கோழைத்தனம் வௌிப்பட்டுள்ளது. அவரது 56 அங்குல மார்பு சுருங்கி விட்டது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
