*மகளிர் குழு கலை நிகழ்ச்சி
கரூர் : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026லை முன்னிட்டு வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து 137 குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரவிகுமார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், பேரணிகள், கோலங்கள், வாக்காளர் உறுதி மொழி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
137 குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் 100% வாக்கு வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளித்தலை சட்டமன்றத் தொகுதி, குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வாக மகளிர் சுயஉதவிக்குழு, துய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு கோலம், கலைநிகழ்ச்சி, துண்டுபிரசுரங்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அநிநவீன மின்னனுவாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிப்பரப்பட்டது.
முன்னதாக மினிபேருந்தில் தேர்தல் நாள் மற்றும் தேர்தல் திருவிழா -தமிழ்நாட்டின் பெருவிழா என்ற வாசகம் அடங்கிய ஒட்டுவில்லைகள் பேருந்தில் ஒட்டப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட பலகையில் விழிப்புணர்வை வழியுறுத்தி கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். மக்கள் ஆர்வமுடம் கையெழுத்திட்டு தாங்கள் வாக்களிப்பதை உறுதி செய்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குளித்தலை நகராட்சி ஆணையர் சுதர்சன், திட்ட இயக்குநர் தனசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இந்துமதி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
