கோவை, ஏப். 7: ஈரோடு-செங்கோட்டை ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை-திண்டுக்கல் மார்க்கத்தில் பல்வேறு இடங்களில் தண்டவாள மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இம்மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16845), நாளை (8ம் தேதி) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இயங்கும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் (16846) நாளை மறுநாள் (9ம் தேதி) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
