சென்னை: வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சிட்கோ நகர் 94-வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவியும், முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது பகுதி செயலாளர் கூபி ஜெயன் ,தொகுதி பொறுப்பாளர் நாகலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து கார்த்திக் மோகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும், நாடார் சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பெரும் பங்காற்றி வரும் நாடார் சங்கப் பெருமக்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும் வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ‘ஸ்ரீ வல்லப விநாயகர்’ ஆலயத்திற்குச் சென்று, வழிபாடு நடத்தினார், பின்னர் அங்குள்ள பக்தர்கள், பொதுமக்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து இன்று மாலை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 98வது வட்டம் பகுதியில் உள்ள வி.பி காலனி தெற்கு தெரு (சந்திப்பில்) துவங்குகிறார். தொடர்ந்து திருவள்ளுவர் நகர், அறிஞர் அண்ணா மெயின் தெரு, காமராஜ் நகர், காமராஜ் 1,2,3,4,5 தெருக்கள் மற்றும் குனுக்கு சந்துகள், மாதா கோயில் தெரு, கலைஞர் தெரு, சோலையம்மன் கோயில் தெரு,சோலையம்மன் கோயில் 23, 4, தெருக்கள் (ம) குறுக்கு தெரு, அயனாவரம் சாலை, டாக்டர் அம்பேத் தெருக்கள், சோமசுந்தரம் 6வது தெரு, வி.பி.காலனி விரிவு, உஜ்ஜினி தெரு புது நகர் 12,3,4 தெருக்கள்,அயனாவரம் சாலை, , போலீஸ் மாணிக்கம் தெரு.பழனியப்பா 1,2, தெருக்கள், ரங்கையா தெரு., D.R.சண்முகம் தெரு,, பார்த்தசாரதி தெரு, ராமநாதன் தெரு, ராமநாதன் சந்து, ரங்கப்பா தெரு, புது நகர் ஆதி ஆந்திரா தெருக்களில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
