மேட்டூர், ஏப்.6: மேட்டூர் அருகே உள்ள செக்கானூர் ஒட்டபள்ளி கரட்டைச் சேர்ந்தவர் சசிகுமார்(40). பொக்லைன் இயந்திர டிரைவர். இவரது மனைவி கலைச்செல்வி(36). இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2வது முறையாக கலைச்செல்வி கர்ப்பமானதால், மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக, கடந்த 31ம் தேதி சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அவருக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே கலைசெல்வி உயிரிழந்தார்.
இதனால் அவரது கணவர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
