குருவாயூர் சத்திரம் நாகர்கோயிலில் பிரதிஷ்ட தின விஷேச பூஜை

பாலக்காடு, ஏப்.5: கேரளாவில் பிரசித்திப்பெற்ற குருவாயூர் சத்திரம் நாகர்கோயிலில் பிரதிஷ்ட தின விஷேச பூஜைகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். குருவாயூர் பிரம்மஸ்ரீ நீலகண்டன் தலைமையில் சத்திரம் நாகர்கோயிலில் அத்தம் நட்சத்திர நாளில் பிரதிஷ்ட தின விஷேச பூஜைகள் நடைபெற்றன.  நாகர்கோயில் வளாகத்தில் விஷேச நாகர் படத்துடன் கூடிய வண்ண கோலங்கள் அமைத்து நாகர்தோஷ பூஜைகள் நடந்தது.

கலசபூஜை, கலசம் ஆடல் ஆகியவை உட்பட சிறப்பு நாகதோஷ நிவாரண பரிகார பூஜைகளும் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர், இளம் பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குருவாயூர் நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், நிர்வாகி அருண்குமார் ஆகியோர் உட்பட தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் என பங்கேற்றிருந்தனர்.

 

Related Stories: