சீர்காழி, ஏப்.5: சீர்காழி புறவழிச்சாலையில் நிலையான கண்காணிப்புகுழு நடத்தி வாகன சோதனையில் காரில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.1,14,800 பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதி, நிலையான கண்காணிப்பு குழு -5, சீர்காழி நகராட்சி மேலாளர் தினகர் தலைமையில் சீர்காழி பைபாஸ் (பனமங்கலம் ரவுண்டானா) அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இந்தர் பட்டேல் த/பெ. சம்ரட்டாராம் என்பவரின் காரில் சோதனை நடத்தியபோது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1,14,800 கைப்பற்றப்பட்டது. இந்த தொகையினை சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
