மதுரை தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் ராமசீனிவாசன் அளித்த பேட்டி: பாஜ சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜ மாநில முதலமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளனர். விஜய் இரண்டு இடங்களில் போட்டியிடுவதே அவரின் பலவீனத்தை காட்டுகிறது. விஜய் வெளியே வந்தாலே விபத்துக்கள் நடப்பதற்கு அவரது ஜாதகம் தான் காரணம். சில டாக்டர்கள் கைராசி டாக்டர்களாக இருப்பார்கள். உயிர் போகுமோ அல்லது போகாதோ என இருக்கும் நோயாளிகளை அங்கு கொண்டு செல்வார்கள்.
டாக்டர் கையை பிடித்தாலே நோயாளி இறந்துவிடுவார். அதுபோல் தான் விஜய். அவர் ஊருக்குள் வந்தாலே விபத்துக்கள் நடக்கிறது, துர்சம்பவங்கள் நடக்கிறது என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்? அவரின் ஜாதகம் சரியில்லை என நினைக்கிறேன். நல்ல ஜோதிடராக பார்த்து அவர், பரிகாரம் செய்ய வேண்டும். மக்கள் அவரை நினைத்து பயப்படுகின்றனர். விஜய் வெளியே வந்தாலே மக்கள் பயப்படுகின்றனர். அதை அவர் சரிசெய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
