×

பகலில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்து, மாலையில் குளிர்வித்த கோடை மழை வேலூர் மக்களுக்கு ஆறுதல்

வேலூர், ஏப்.5: வேலூரில் நேற்று பகலில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் பெய்த கோடை மழையால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கோடை காலமான, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக மார்ச் 3ம் தேதியே 100 டிகிரியை கடந்து வெயில் பதிவானது. தொடர்ந்து அதிகரித்து வந்த வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
குறிப்பாக கடந்த 29ம் தேதி வேலூர் மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக 104.5 டிகிரியாக வெயில் பதிவானது. தொடர்ந்து கடந்த 2ம் தேதி 101.3 டிகிரியும், நேற்றும் முன்தினம் 103.1 டிகிரியாக பதிவானது. இரவு நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பலர் தூக்கமின்றி புழுக்கத்தில் தவித்து வந்தனர். கோடை மழை பெய்து வெப்பத்தை தணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

தொடர்ந்து, நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. அனலின் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் பலர் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர். இதில் நேற்று 104.5 டிகிரி வெயில் பதிவானது. இதற்கிடையில், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல் திடீெரன வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 4.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வேலூர் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் அனலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் சற்றே மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Vellore ,
× RELATED செல்போன் பறித்த இரு சிறுவர்கள் உட்பட 4...